2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணாமல் போன கணவன் வீடு திரும்பாத பட்சத்தில் பிள்ளைகளுடன் தீக்குளிப்பேன் - மட்டு மாநகர சபை உறுப்பினர

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்,ஜௌபர்கான், றிபாயா நூர்)
 
தனது கணவன் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பாத பட்சத்தில் பிள்ளைகளுடன் மாநகர சபைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் மனைவி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது கணவன் விடயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கூறியுள்ளார்.

காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயம் செய்த  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
கடந்த 23ஆம் திகதி முதல் குறித்த மாநகர சபை உறுப்பினர் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து, தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு காணாமல் போனவரின் மனைவி இதன்போது முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததோடு தனது கணவனை கடத்தியவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், இது தொடர்பாக தான் முக்கிய தீர்மானமொன்றை விரைவில் எடுக்கவிருப்பதாக உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் பிரகாசம் சகாயமணியின் குடும்பத்திடம் ஆறுதல் தெரிவிப்பதை படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .