2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் கரப்பந்தாட்ட பயிற்சி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச மாணவர்களுக்கு கரப்பந்தாட்ட பயிற்சியை வழங்கும் நடவடிக்கைகளை வாகரை 233ஆவது இராணுவ படைபிரிவினர் மேற்கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 பாடசாலைகளைச்சேர்ந்த 240 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இருநாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

வாகரை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பயிற்சி முகாம் இன்று நிறைவு பெற்றது. 233ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி கேணல் திலக் வீரகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X