2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மனிதர்களுக்கு அச்சுறுத்தலான முதலை பிடிபட்டது

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எம்.சுக்ரி, ஜிப்ரான் )


காத்தான்குடி வாவியில் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த முதலையை மீனவர்களும் பொதுமக்களும் இணைந்து இன்று பிற்பகல், காத்தான்குடி வாவியில் வைத்து பிடித்துள்ளனர்.
 
தற்போது இம்முதலையை பொதுமக்கள் பார்வையிட்டுவருகின்றனர்.

 பிடிக்கப்பட்ட இம்முதலை 13 அடி நீளமானது என காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் அஸ்பர் தெரிவித்தார்.

 இம் முதலையை பிடித்துள்ளமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இம்முதலை கடந்த சனிக்கிழமையன்று மீனவர் ஒருவரை கடித்து இழுத்து வாவியினுள் கொண்டு சென்றது. பின்னர், மறுதினம் குறித்த மீனவர் சமலமாக மீட்கட்டது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 17 October 2010 09:14 PM

    காட்டிக்கொடுத்துவிடும் சத்தம் கொடுத்து கபரகொய்யா என்னும் ஸ்போட்டெட் இகுவான (spotted iguana) வளர்க்காவிட்டாலும் கொல்லாதீர்கள். துன்புறுத்தாதீர்கள். நீர்நிலைகளை விரும்பும் இந்த நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி பார்க்க பயங்கரமானதாக இருந்தாலும் சாதுவான.து பயந்து மிரண்டு ஓடக்கூடியது. பாம்புகளை மட்டுமல்ல, அநேகமான ஜந்துக்களை விழுங்கிவிடும். நீர்நிலைகளை அழித்ததன் பலன் மக்கள் இதெற்கெல்லாம் அருவருப்பு அல்லது எள்ளி நகையாடுதல் இவை கேட்பாரற்று கவனிப்பாரற்று சுயநலத்துக்காக கொல்பவர்கள் அல்லது சாகட்டும் என்றுவிட

    Reply : 0       0

    xlntgson Wednesday, 20 October 2010 09:10 PM

    முதலைகள் நீரில் இருப்பதை காட்டிக்கொடுக்கும் இந்த கபரகொய்யாக்கள் இருப்பதை அறிந்தும் அல்லது அவற்றின் ஒலியை கேட்டும் முதலைகள் வேகமாக மறைந்துவிடும். கபரகொய்யா சுரப்புகளுக்கு முதலை பயம்! மனிதருக்கும் பாதுகாப்பு ஆற்றோரங்களில் படிக்கட்டு குளிக்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் அங்குதான் படிகளில் நின்று மாத்திரம் குளிக்க வேண்டும். முதலை படி ஏறாது. படிக்கட்டு இல்லா இடங்களில் அதை கட்டவேண்டும் அதுதான் துறை எனப்படும். துறைமுகங்களை இப்போது துறை என்று சுருக்கமாக அழைத்தாலும் பாலத்துறை என்னும் இடத்தில் முன்பிருந்த்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .