2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் அமைச்சர் டியூ.குணசேகர

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

சிறைச்சாலைகள மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர இன்று வியாழக்கிழமையும்  நாளை வெள்ளிக்கிழமையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

வெலிகந்தையில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் விடுதலைப் புலி; உறுப்பினர்களை இன்றைதினம்  சந்திக்கும் அமைச்சர், நாளை காலை 8 மணிக்கு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியையும் திறந்து வைக்கவுள்ள அமைச்சர், மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ள மாவட்ட உயர்மட்ட மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X