2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாநகர சபை உறுப்பினர் என்னை தாக்க முற்பட்டார்: முதலமைச்சர் வாக்குமூலம்

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே நான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றதாகவும் மாநகர சபை உறுப்பினர் ஆர்.பிரபாகரன் தன்னை தாக்க முற்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று சனிக்கிழமை வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

"மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிட கடைத்தொகுதி தொடர்பான கூட்டமொன்று நேற்று காலை நடைபெறுவதாகவும் அதில் தன்னையும் கலந்து கொள்ளுமாறும் எனக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.

ஆனால் காலையில் வேறு முக்கிய நிகழ்வு இருந்ததால் மாலையில் அக்கூட்டத்தை நடாத்துமாறு கூறினேன்.

அதன்படி நேற்று மாலை நடைபெற்ற  கூட்டத்திற்கு, எனக்கு விடுக்கப்பட்ட அழபைப்பின் பேரில் நான் சென்றேன்.

அக்கூட்டத்தில் எனது ஆதரவான மாநகர சபை உறுப்பினாகளுக்கும் இன்னும் சில மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் சிறியளவிலான கைகலப்பும் கலவரமும்  ஏற்பட்டது.

அப்போது மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத் தாக்க முற்பட்டார். அதன் போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டனர். அத்துடன் நான் வெளியேறி விட்டேன்" என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.



 

 


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Sunday, 14 November 2010 05:29 PM

    அடடா...காந்தி தோற்றுப் போனார் நமது முதலமைச்சரின் அடக்கமான வெளியேற்றத்தின் முன்னால்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .