2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மக்காவில் இலங்கை பெண் மரணம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

புனித மக்கா நகருக்கான ஹஜ் பயணத்தை மேற்கொண்டுச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த பெண்ணொருவர் மக்கா நகரில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்துள்ளார்.

புதிய காத்தான்குடி, மத்திய வீதியைச் சேர்ந்த மரியம்வீவி (வயலயது 55) என்ற பெண்ணே இவ்வாறு மரணமானவராவார்.

இவர் மக்கா நகரிலுள்ள அறபா மைதானத்திலிருந்து முஸ்த்தலிபா எனுமிடத்திற்கு பயணித்துக்கொண்டிருக்கையிலேயே மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது ஜனாசா நேற்று மாலை மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X