2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி பெயரில் பழத்தோட்டம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தைச் சிறப்பிக்கும் முகமாக அவரது பெயரைக் கொண்ட பழத் தோட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பழத் தோட்டத்தில் மாதுளை, தோடை உள்ளிட்ட பலவகையான பழ மரக் கன்றுகள் நடப்பட்டன.

இந்தப் பழத்தோட்டம் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பண்ணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப வைபவத்தில் உப வேந்தர், பீடாதிபதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X