2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வறிய மக்களுக்கு காணி உறுதி

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் 'ரங்வீம'  வறிய மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு இன்று திங்கட்கிழமை காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.ரஜாய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ராஜ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர் எச்.எம்.அமானுல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .