2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கனரக வாகனம் தடம்புரண்டதில் இருவர் காயம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்,எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி உர மூடைகளை ஏற்றிச் சென்ற  கனரக வாகனமொன்று மன்னம்பிட்டியில்   வைத்து  நேற்றிரவு  தடம்புரண்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இவ் லொறியில் 400 மூடை யூரியா , ரீ.எஸ்.பி  மற்றும் எம்.ஓ.பி. உரமூட்டைகள் காணப்பட்டதாக பொலனறுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலநறுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த சேனநாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .