2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்ட வருட இறுதி அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வருட இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மீன்பிடி, சுகாதாரம் , உட்கட்டமைப்பு உட்பட கமநெகும அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .