2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உலகவங்கி உதவ உறுதி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

யுத்தம் மற்றும் சுனாமி தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் தொழில்நுட்ப அறிவைமேம்படுத்த உலகவங்கி தொடர்ந்து உதவி வழங்க தயாராகவிருப்பதாக உலகவங்கியின் முகாமைத்து பணிப்பாளர் கலாநிதி நகோசி ஒகொன்கோ இவேலா மட்டக்களப்பில் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு, கல்லடி நெலசல நிறுவனத்திற்கு விஜயம் செய்த அவர் அந்நிலையத்தில் கணணி கற்கை நெறியை மேற்கொண்டுவரும் மாணவர்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அங்குள்ள மாணவர்களுடன்  முகாமைத்துவ பணிப்பாளர் சிநேக பூர்வமாக கலந்துரையாடினார்.
இதேவேளை இம்மாவட்ட மீனவர்கள்' எதிர்கொள்ளும் பிரரச்சினைகள் அவர்களின் தேவைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X