2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பனிச்சங்பேணி பாலத்தில் மூழ்கிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாகரை, பனிச்சங்கேணி பாலத்தில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரது சடலம் இன்று பனிச்சங்கேணி முகத்துவாரப் பகுதியில் இருந்;து மீட்கப்பட்டுள்ளது.
 
வாகரையிலிருந்து வாழைச்சேனை நோக்கி வரும் வழியில் பனிச்சேங்கேணி பாலத்தின் அருகே வெள்ள நீர் அதிகமாக காணப்பட்டதால் அதைக் கடக்க முற்பட்ட வேளையில் மேற்படி குடும்பஸ்தர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் விநாயகம் விமலநாதன் (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது வாகரை பொலிஸாரின் விசாரனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .