2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாளை திறக்கப்படும் பாடசாலைகளை மாணவர்களைக் கொண்டு துப்புரவு செய்ய வேண்டாம: முதலமைச்சர்

Super User   / 2011 ஜனவரி 16 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

வெள்ளம் காரணமாக மூடப்பட்டு நாளை திறக்கப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகளை மாணவர்களைக் கொண்டு துப்புரவு செய்ய வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு முதலமைச்சரின் பணிமனையில் நடைபெற்ற அரச உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், உள்ளுராட்சி சபை தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .