2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஜனவரி 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், ஜிப்ரான்)

மட்டக்களப்பு நகரை அண்டிய புதுநகர், நாவற்காடு, ஈச்சந்தீவு உள்ளிட்ட பல  பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் மட்டக்களப்பு கோட்டைமுனைப் பாலத்தின் ஊடான பிரதான வீதியில் மங்களராமய விகாராதிபதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமக்கு வழங்க கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
 
இதேவேளை விகாராதிபதி அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தான் பொருள்கள் கேட்டதாகவும் அவர் பொருள்கள் வழங்காததனால் தன்னால் பொதுமக்களுக்குப் பொருள்கள் வழங்க முடியாதுள்ளது. அதற்கெதிரhகவே போராட்டம் நடத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
பொதுமக்களது விபரங்களைப் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே பொருள்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்காள்வதாக தெரிவித்தார்.
 
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக வீதி போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .