2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுவாஞ்சிக்குடி கடலில் மூழ்கி காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுஷன்)

களுவாஞ்சிக்குடி கடலில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல் போன மாணவனின் சடலம் சற்று முன்னர் ஒந்தாச்சிமடம் கடற் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குருமன் வெளியிலுள்ள பாடசாலையொன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கின்ற 8 மாணவர்கள் களுவாஞ்சிக்குடி கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். இத்தருணத்தில் ஒரு மாணவனை அலை அடித்துச் சென்றுவிட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஏனைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்த நிலையில் சற்று முன்னர் அவரது சடலம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .