2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இயந்திரக் கோளாறினால் 'பாதை' தடம்மாறி பயணிகள் பரிதவிப்பு

A.P.Mathan   / 2011 மார்ச் 01 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுவான்கரைக்கும் படுவான்கரைக்கும் இடையில் ஆற்றில் செயற்படுகின்ற பயணிகள் போக்குவரத்து படகாகிய 'பாதை'யில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் பயணிகள் நிர்க்கதியற்கு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று காலை 6 மணியளவில் புறப்பட்ட 'பாதை' இடைநடுவில் இயந்திரக் கோளாறினால் நின்றுவிட்டது. சுமார் 500 மீற்றர் தூரத்தினை கடக்கவேண்டியவர்கள் தற்சமயம் 7 கிலோமீற்றர் தொலைவுக்கு ஆற்று நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அற்றுநீரில் அடித்துச் செல்லப்படும் இந்த 'பாதை'யை கரை சேர்ப்பதற்கு இலங்கை கடற்படையின் உதவியை பயணிகள் தற்சமயம் நாடிநிற்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .