2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'நாம் பயிரிடுவோம் நாளை அறுவடை செய்வோம்'

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

நாம் பயிரிடுவோம் நாளை அறுவடை செய்வோம் திட்டத்திற்கமைய் 500 மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் கிண்ணியா கல்வி வலயத்தில் சகல பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக கிண்ணியா தி/தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில்  ஒரு பிள்ளைக்கு ஒரு கன்;று வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அதிபர் ஏ.ஆர்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  கிண்ணியா வலயக் கல்வி பணிமனை விவசாய பாட இணைப்பாளர் எம்.எம்.இபாதுள்ளா மற்றும் விவசாய பாட ஆசிரியர் ஏ.எம்.பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X