2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரக்கடத்தலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2011 ஜூலை 16 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பொலன்னறுவை  நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிக்கந்த, ஓமடியாமடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெலிக்கந்த பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில்,  இவர்கள் இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .