2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிரான் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
கிரான் பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு இணைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் கிரான்  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், துரைரெட்ணம் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் தவராஜா, பிரதேசசபை தவிசாளர் உதயஜீவதாஸ் உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், கிராமத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கமநெகும, திவிநெகும, மீளெழுச்சித்திட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஒதுக்கீடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .