2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாகன விபத்தில் சிறுவன் பலி; சாரதி கைது

Super User   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித் )
 
மட்டு. கோட்டை கல்லாறு பிரதான வீதியில் இன்று செவ்வாக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யோகராஜா டினுசன் என்ற சிறுவனே வாகன விபத்தில் உயிரிழந்தவராவார். வீதியை கடக்க முயன்ற போது, மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற சிறிய ரக டிப்பர் மோதி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்;.
 
குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் பெரிய கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X