2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீயான்கல்குள பிள்ளையார் ஆலயத்திற்கு ஒலிப்பெருக்கி உபகரணங்கள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீயான்கல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி மற்றும் மின்பிறப்பாக்கியினை கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று வியாழக்கிழமை அன்பளிப்பு செய்தார்.

சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியிலான பொருட்கள்  இதன்போது  அன்பளிப்பு செய்யப்பட்டன. மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச செயலாளர் கே.தவராஜா, ஆலய நிருவாகசபை உறுப்பினர்கள், விவசாயப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .