2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவருக்கு கௌரவம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் 2010, 11ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

விநாயகர் வித்தியாலய அதிபர் கனகசூரியம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்விப்பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .