2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முச்சக்கர வாகனம் தீவைப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் வியாழக்கிழமை அதிகாலை வீடு ஒன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று விவகாப்பதிவாளர் ஏ.சி.எம்.தாஹா என்பவரின் வீட்டில் அவருக்குச் சொந்தமான முற்சக்கர வண்டிக்கு இனம் தெரியாத சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .