2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா கலந்துகொண்டு கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

வறுமைக்கோட்டின் கீழுள்ள சமூர்த்தி பயணாளிகள் குடும்பத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இதன்போது கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X