2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீர் சுகாதார வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவரும் நீர் சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகளில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மத்திய கல்லூரி, வந்தாறுமூளை கணேசா வித்தியாலயம், வந்தாறுமூளை விஷ்னு வித்தியாலயம், பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இந்த விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் நடைபெற்றன.

இதன்போது நீர் சுகாதார வேலைத்திட்டம், பிள்ளைகளின் சுகாதாரம் ஆகியன தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன்,  பாடசாலை தோட்டத்திற்கான விதைகளும் வழங்கப்பட்டன.

இதில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா, பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.றஹ்மத்துல்லா உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .