2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கணவனை இழந்த பென்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, லோஹித், ஜிப்ரான்)

ஏறாவூர் பற்று மயிலம்பாவெளி கிராமத்தில், கணவனை இழந்த பென்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலம்பாவெளியில் 51 குடும்பங்களும் விபுலானந்தபுரத்தில் 55 குடும்பங்களுமாக மொத்தம் 106 பயனாளிகளுக்கு சுமார் 30 இலட்சம் ரூபாய் பணம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இத்திட்டத்தினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் இக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு கட்டிடம்  திறந்துவைக்கப்பட்டதுடன் மிகவும் கஸ்டப்பட்ட 10 குடும்பங்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளும் கையளிக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்,

'எமது மாகாணத்தில் பெரும்பாலான பெண்கள் கணவனை இழந்து குடும்பத்திற்;கு தலைமை வகிப்பவர்களாக வாழ்கின்றார்கள். இவர்களை வாழ்வாதார ரீதியில் வளம்பெறச் செய்வதன் ஊடாகவே குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தியை நாம் எதிர்பார்க்க முடியும். அந்த வகையில்தான் நான் முதலமைச்சராக இருக்கின்ற போது விசேடமாக இத்திட்டத்தை கிராமங்கள் தோறும் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

இத்திட்டமானது முதற்கட்டமாக குறிப்பிட்ட சில கிராமங்களுக்கே சென்றடைந்தாலும் எதிர்கலத்தில் ஏனைய பல திட்டங்களின் ஊடாக இதனை முழுமை பெறச் செய்ய முடியும்.

பெண்கள் அபிவிருத்தியிலே அதிக வகிபங்கு எடுக்க வேண்டும். அப்போதுதான், எமது பிரதேச அபிவிருத்திக்கான பங்களிப்பு இருக்கின்றது என்ற எண்ணம் அவர்களிடத்திலே தோன்றும். அப்போது அவர்கள் இயல்பாக தங்களது சுயவருமானத்தை அதிகரிக்கின்றவர்களாகவும் ஒரு தொழிலாளியாகவும் மாறுவார்கள். இதனூடாக நாம் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் கண்ட பின்னடைவை போக்க முடியும். அத்தோடு இன்று இந்தக் கிராமத்திலே இத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றோர் ஏனைய கிராமங்களிலுள்ள பெண்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும். மேலும் இத் திட்டத்தின் முழுமையான பலனையும் அவர்கள் அனுபவிக்க வேண்டும்'  என அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .