2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சேதமடைந்த பனிச்சங்கேணிப் பாலத்தை உறுப்பினர் சந்திரகாந்தன் பார்வை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு – திருகோணமலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள பனிச்சங்கேணி பாலம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதுடன், இப்பகுதியூடான போக்குவரத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.

இவருடன்  முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்), கோரளைப்பற்று வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுரேஸும் பங்கேற்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .