2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடத்திறகான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மண்முனைப்பற்று பிரதேச சபைக்காக அமைக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி கிறிஸ்டினா சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ்.சத்தியானந்தி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜ், மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

16 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி கிறிஸடினா சசிதரன் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X