2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டு. வாவிக்கரையில் சிரமதானப் பணி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் டெங்கொழிப்புத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வாவிக்கரையில்  மாபெரும் சிரமதானப் பணி நேற்று செவ்வாய்க்கிழமை  மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்ப மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் வருடாந்த செயற்றிட்டத்தின் கீழ் டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர், யுவதிகள் இச்சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இச்சிரமதானப் பணியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மற்றும் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் உட்பட பலர் வருகை தந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X