2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொலிஸ் பரிசோதனை

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

பொலிஸ் திணைக்களத்தினால் ஆறு மாதங்களுக்கு ஒருதடவை நடத்தப்படும் பரிசோதனைகள் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

முதல் நிகழ்வாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் அணிவகுப்பை புதிதாக கடமையேற்றிருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன ஆகியோர் பரிசோதித்தனர்.

அணிவகுப்புப் பரிசோதனையின் பின்பு வாகனங்கள், மோப்ப நாய்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், மற்றும் பொலிஸ் கட்டிடம் என்பன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசோதிக்கப்பட்டன.

இதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர ஆகியோர் பங்கேற்றனர்.                

பரிசோதனைகளின் முடிவில் விளக்கமளிக்கும் கூட்டம் கோட்டைமுனை செல்வநாயகம் மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் நடாத்தப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X