2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்ச்சூழலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவரத்திக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உறுதியளித்துள்ளார்.

இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கண்டறிய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று மாலை நேரடியாக விஜயம் செய்தார்.

வைத்தியசாலையின் வைத்தியதிகாரி டாக்டர் கே.தவனேசனுடன் அமைச்சர் குறைகளை கேட்டறிந்ததுடன் வைத்தியர் பறறாக்குறையை விரைவில் நிவர்த்தி செயய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் சமுகமளித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .