2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரதி அஞ்சல் மா அதிபராக திருமதி வாசுகி நியமனம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராக ஆரையம்பதி பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி வாசுகி அருள்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராக கடமையாற்றிய கே.விமலநாதன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரின் வெற்றிடத்திற்கு திருமதி வாசுகி அருள்ராஜா கடந்த 2ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளராக கடமையாற்றிய எஸ்.வாசுதேவன் ஆரையம்பதி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆரையம்பதி செயலாளர் எஸ்.வாசுதேவன் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .