2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நவகிரி நகர் கிராமத்திற்கு மின் விநியோகம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்,
v];.utPe;jpud; 

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவக்கு உட்பட்ட நவகிரி நகர் கிராமத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

நவகிரி நகர் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.குகதாசனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், களுவாஞ்சிக்குடி மின்சார பாவனையாளர் காரியாலயத்தின் அத்தியட்சகர் கே.அனுசாந் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இதுவரை காலமும்   குப்பி விளக்குகளையே பயன்படுத்தி வந்தனர்.

தற்போது  நவகிரி நகர் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என அந்தக் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X