2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஒன்பது பேருக்கு விடுதலை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 09 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரக்காடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தாகக் கூறப்படும் 09 பேர் கடந்த 28ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட இடத்தில் பணம் அல்லது பெறுமதியான பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உதவி நாடப்பட்டிருந்த நிலையில் இரு பேராசிரியர்கள் இது தொடர்பில் ஆய்வினையும் மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்
.
இது தொடர்பான வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி றியாழினால் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்களின் சார்பில் பிரபல சட்டத்தரணி பிரேம்நாத் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். பொலிஸாரினால் பிணையில் விடுவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டபோதும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஒன்பது பேரையும் நீதிமன்றம் விடுவித்ததாக சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X