2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பாலர் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 14 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் சிப்லி பாரூக்கீன் பன்முகப்படுத்தப்பட்ட மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ், பாலர் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் காத்தான்குடி பிராந்திய பணிமனையில் திங்கட்கிழமை (13) வழங்கி வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலை, புதிய காத்தான்குடி அன்வர் பாலர் பாடசாலை, புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலை என்பவற்றுக்கு பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தலைமையில் நடைபெற்ற விஷேட நிகழ்வில், உபகரணங்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், இணைப்பாளர் எம்.ஐ.நாஸர், ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர் எம். கரீம், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஒவ்வொரு பாலர் பாடசாலைக்கும் தலா 25,000 ரூபாய் பெறுமதியான கதிரை மற்றும் மேசை உட்பட பாலர் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .