2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மாமாங்கம் பகுதியிலுள்ள வீட்டு வளவொன்றில் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கரவண்டியொன்று திங்கட்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் தம்மிடம் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வெளியில் வெளிச்சம் தெரிவதைக் கண்டு வந்துபார்த்தபோது, முச்சக்கரவண்டி எரிந்துகொண்டிருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி தானாக தீப்பற்றுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .