2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாவியிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவுள்ள வாவியிலிருந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வாவியில் சடலம் காணப்படுவதாக அவ்வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .