2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஏறாவூர் நகர சபையின் 27 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றும் 27 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது என நகர சபை தலைவர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதாரத் தொழிலாளர்கள், சாரதிகள், நூலக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் வருமானம் திரட்டும் உத்தியோகத்தர்கள் ஆகிவற்றை சேர்ந்த 27 பேருக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

எதர்வரும் புதனன்று இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .