2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 இடங்களில் மின்வெட்டு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 இடங்களில் நாளை மறுதினம் வியாழக்கிழமை எட்டு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று மாவட்ட பிரதேச மின்பொறியிலாளர் திருமதி.என்.மேகநாதன் தெரிவித்துள்ளார். காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணிவரை இம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாழைச்சேனை, மீறா ஓடை, உன்னிச்சை, ஆயித்திய மலை, பங்குடாவெளி, இழுப்பபைச்சேனை, கரடியானாறு, மரப்பாலம், ராஜபுரம், கித்துள், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பஞ்சேனை, ஐயங்கேணி, மிச்நகர், தலவாய், மீராதேவி, சதாம்குசைன் கிராமம், ஹிஸ்புல்லாஹ் கிராமம், வந்தாறுமூலை கொம்மாந்துரை, செங்கலடி, கலுவன்கேணி, ஏராவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, ஊரணி ஆகிய இடங்களிலே மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X