2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீடு உடைத்து 6 இலட்சம் பெறுமதியான நகை, பணம் கொள்ளை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பழைய கல்முனை வீதியிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை காலை 7 மணிக்கும் பகல் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடைத்து 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்  பணத்தையும் 3 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பெறுமதியான  நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வீட்டை மூடிவிட்டு அலுவலகத்திற்குச் சென்று விட்டு பகல் 1 மணிக்கு வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .