2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

"திறன் காண்போம்" சிறுவர் நாடக விழா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தின் அழகியற் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "திறன் காண்போம்" என்ற தலைப்பிலான சிறுவர் நாடக விழா இன்று வந்தாறுமுலை மத்திய மகா வித்தியக்லய மண்டபத்தில் வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
 
குறித்த கல்வி வலய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட இசைஇ நடனம்இ நாடகம் ஆகிய துறைகளில் சிறுவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் க.கருணாகரன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி கெளரவித்தார்.
 
சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அதிபர்கள் பொன் தவநாயகம் மற்றும் எம்.ராஜரட்னம் ஆகியோருடன் சிறுவர் கதைக் கலைஞரான மாஸ்டர் சிவலிங்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி இவ் விழாவில் கெளரவிக்கப்பட்டமை சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .