2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அசுத்த நீர் விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால், ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (12)  மாலை விநியோகிக்கப்பட்ட நீர் சேறு கலந்த நிலையில் அசுத்தமாக இருந்ததாக, பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதனால் நீர் விநியோகத்திலிருந்து நேரடியாக வழமைபோன்று நீரைப் பருகுபவர்கள் சேறு கலந்த நீரைப் பருகவேண்டியேற்பட்டதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் கடந்த 01ஆம் திகதி காலையும் இவ்வாறு அருந்துவதற்குப்  பொருத்தமில்லாதவாறு நிறம் மாற்றமடைந்த அசுத்த நீர் விநியோகம் செய்யப்பட்டிருந்ததாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .