2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தொடர்ந்தும் மன்சூர்

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், சகா

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ஜ.எம். மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியுமென, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இருந்தபோது மாகாணப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிஸாமை நியமித்தார்.

இந்நிலையில், மன்சூரால் மேற்படி நியமனத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எம்.ஐ.எம்.மன்சூரை தொடர்ந்தும் கடமையாற்றுமாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .