Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்
கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள, புணானை காட்டுப் பகுதியில் வைத்து, பஸ் ஒன்றுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (16) இரவு 9.30 மணியளவில், புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பஸ்ஸை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த நால்வர், பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் தீவைக்கப்பட்ட பொழுது பஸ்ஸிலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த, 30 வயதுடைய எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த, 25 வயதுடைய எம். முஹம்மத் ஆகியோர் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
2 hours ago
2 hours ago