2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாவலடி வாவிக்கரையோரம் ஆணொருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜனவரி 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி வாவிக்கரையோரம், சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம், இன்று(10) காலை கரையொதுங்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .