2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதையேறிப் போச்சு; புத்தி மாறிப் போச்சு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபானத்தைக் குடித்து மதிமயங்கிய நிலையில், வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த பெண்ணை எழுப்புவதில் தோல்வியடைந்த பொலிஸார், அப்பெண்ணை அப்படியே விட்டுச் சென்ற சம்பவமொன்று, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெளிப் பிரதேசமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவரே, மதுபோதையில் குறித்த பிரதேசத்துக்கு வந்து, நிதானம் தவறிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்துள்ள கிராம மக்கள், இப்பெண் மது அருந்தியுள்ளமை பற்றி அறியாது, அப்பெண்ணுக்கு வேறேதேனும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.

அதன்படி, அரை மணிநேரத்துக்குள் உரிய இடத்துக்கு வந்த பொலிஸார், அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியுள்ளமையாலேயே, அவர் நிதானம் தவறிய நிலையில் வீதியோரத்தில் விழுந்துக் கிடந்துள்ளார் என, அறிந்துகொண்டனர்.

எனினும், அப்பெண்ணை விசாரிப்பதற்காக எழுந்திருக்கச் செய்வதற்கு பொலிஸார் முடிந்தளவு சத்தம் போட்டும், அப்பெண்ணால் எழுந்திருக்க முடியவில்லை. பெண் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு வந்திருக்காததால், வேறு வழியின்றி பொலிஸார் சென்றுவிட்டனர்.

சற்றுநேரத்தில், போதை ஓரளவுக்குத் தெளிந்த அப்பெண், பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்ததை அறிந்ததுடன், தான் வீதியில் வீழ்ந்து கிடந்ததை நினைத்து வெட்கித்தவராக, ஆடையைச் சரி செய்துகொண்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடித் தப்பியதாகவும் சம்பந்தப்பட்ட பெண் வெளியூர்வாசி என்று தெரியவருவதாகவும் கிராம மக்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .