2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டு. தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 9 பேருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று புதன்கிழமை (13) அதிகாலை வெளியான பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். 

மாவட்டத்தில் தொடர்ந்து எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் செய்யப்பட்ட 132 பிசிஆர்  பரிசோதனையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் மூவருக்குமாக 12 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X