2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீள்குடியேற்ற கிராமத்தின் முதலாவது தொழுகை

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான அல் - மஜ்மா கிராமத்தின் அல் - மஜ்மா பள்ளிவாசலின் முதலாது ஜூம்ஆ தொழுகை, நேற்று (11) இடம்பெற்றது.

ஜூம்ஆ பிரசங்கத்தையும் தொழுகையையும் மௌலவி ரீ.எம்.அப்துல் மஜீட் (ஸர்கி) நடத்தி வைத்ததுடன், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஜூம்ஆ தொழுகையில் கலந்துகொண்டதுடன், அவர்களுக்கான பகல் போசனமும் வழங்கப்பட்டது.

அல் - மஜ்மா கிராமத்தில் வாழ்ந்த மக்கள், நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு அப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறியுள்ளனர்.

300 குடும்பங்கள் தற்பேது இங்கு வசித்து வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X