2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிலையத்தில் கொள்ளை

வா.கிருஸ்ணா   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்லடி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்று, நேற்று(05) அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்ளது.

கல்லடி, மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையமே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையத்திலிருந்த சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான பொருட்களும், 20ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் கூரையினை உடைத்து உள்நுழைந்த திருடர்களே கொள்ளையினை நடாத்தியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .