2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேட்பாளர்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு ஆரம்பம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அணி சார்ந்து போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு, செவ்வாய்க்கிழமை(10) மாலை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

10 வட்டாரங்களைக் கொண்ட காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் பத்து வட்டாரங்களில் இருந்தும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இந்த வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், காத்தான்குடி முதலாம் வட்டாரத்துக்கான வேட்டபாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட அவர் அணி சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் வட்டார ரீதியாக பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக, அந்த வட்டாரத்திலிருக்கின்ற பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, இந்த வேட்பாளர் தெரிவு வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்நடவடிக்கை, தொடர்ந்து 10 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .